
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கவலையையும், விமர்சனத்தையும் தூண்டி உள்ளது. அதாவது ஒரு பெண் சாலையின் ஓரத்தில் நின்று, அவரது செல்போனில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது இளைய மகள் ஆபத்தான முறையில் சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவரது மூத்த மகன் ஆபத்தான சூழ்நிலையை சரியான நேரத்தில் கவனித்து, தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் விரைவாக சென்று அந்தச் சிறுமியை காப்பாற்றுகிறார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி கண்டனத்தை ஈர்த்துள்ளது. பலர் தனது குழந்தைகளின் பாதுகாப்பை விட உள்ளடக்கத்தை உருவாக்குவதற்காக தாயே விமர்சித்துள்ளனர். சமூக ஊடக வீடியோக்களை குறிப்பாக ஆபத்தான சூழ்நிலையில் படம் எடுக்கும்போது அதிக விழிப்புணர்வு மற்றும் பொறுப்பின் அவசியத்தை பலர் எடுத்துரைத்துள்ளனர்.
The mother was making a reel on the phone and the little girl was just about to reach the road, suddenly her son comes and point her out 🫡
pic.twitter.com/QS59ak69Sy— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 9, 2024