
2025- 2026 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்திய அரசுக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் எப்படி செலவு செய்யப்படுகிறது என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த பட்ஜெட் விவரங்களை 8ஆவது முறையாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இது குறித்து தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் இல்லாததும் தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறாததும் தமிழகத்தின் மீது இருக்கின்ற வன்மத்தையும் அவர்களின் மாற்றான் தாய் மனப்பான்மையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டைப் பற்றி கண்டுகொள்ளாமல் பதவியை காப்பாற்றிக்கொள்ள தேர்தல் கணக்கு ஓடு குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் வாரி வழங்கியுள்ளது மத்திய பாஜக. இந்த அரசின் வஞ்சப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். நிதி ஒதுக்கீட்டின்போது ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டை மீண்டும் மீண்டும் புறக்கணிக்க தமிழ்நாடு மக்களும் பாசிஸ்டுகளை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு தெரிவித்திருந்தார்.