
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் கேபிஒய் பாலா. இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருவதன் மூலம் மிகவும் பிரபலமாக இருக்கிறார். தற்போது கேன்சரால் பாதிக்கப்பட்ட காமெடி நடிகர் சுப்பிரமணிக்கு சிகிச்சைக்கு தேவையான பணம் அளித்து உதவி செய்திருக்கிறார்.
காமெடி நடிகர் சுப்பிரமணி கேன்சர் 4 ம் நிலையில் இருப்பதை அறிந்த பாலா அவரை நேரில் சென்று சந்தித்து அவருக்கு உதவி செய்யும் விதமாக ரூ.75 ஆயிரம் பணத்தை சிகிச்சைக்காக கொடுத்திருக்கிறார். மேலும் அவர் புற்று நோயால் கஷ்டப்படுவதால் மற்றவர்களும் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று கேபிஒய் பாலா வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க