கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக அருள் ஜீவன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி அருள் ஜீவன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை அறிவியல் ஆய்வகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அருள் அந்த மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவன் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் தந்தை தனது மகனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அருள் ஜீவன் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. இதனால் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் அருள்ஜீவனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.