
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு கோனார்கோட்டை புதூர் கிழக்கு தெரு காலனியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் குமார்(21) என்ற மகன் இருக்கிறார். இவர் நேற்று ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மகேஷ் குமாரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.