
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கிராமத்தில் செல்லையா(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி செல்லையாவை கைது செய்தனர்.
மேலும் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது, குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.