சென்னை வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பெண்கள் இருக்கும் பெட்டியின் முன் வாலிபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினரும், ஓட்டேரி காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் வியாசர்பாடி காந்திபுரம் பகுதியில் வசிக்கும் முனுசாமி(32) என்பது தெரியவந்தது.

இவர் காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில் நிலையத்திற்கு வந்து பெண்கள் ரயில் பெட்டி நிற்கும் இடத்திற்கு அருகே நிர்வாகமாக நின்று ஆபாச செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று ரயில் நிலையத்திற்கு வந்த அவர், ஆபாச செயலில் ஈடுபட முயன்றார். அப்போது காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.