திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை அடுத்த அயித்தம்பட்டு ஊராட்சி கட்டவிரப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவர் அப்பகுதியில் உள்ள காலனி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விவசாய நிலத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல சண்முகம் வேலைக்கு சென்றுள்ளார். அவரது மனைவியும் நிலத்திற்கு சென்றுள்ளார். இதனை கவனித்த மர்ம நபர்கள் சண்முகத்தின் வீட்டை உடைத்து வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி, பீரோவில் இருந்த ரூபாய் 3 லட்சம் மற்றும் 5 சவரன் தங்க நகையை திருடி சென்றுள்ளனர்.

வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய கணவன், மனைவி இருவரும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது மிளகாய் பொடி கொட்டிருப்பதும் பீரோவில் வைத்திருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது அறிந்து அருகில் உள்ள உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விரைந்து சென்று திருடு போன வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் அந்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆளில்லாத வீட்டில் நகை, பணம் கொள்ளை அடிக்க பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.