நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டு சமூக ஊடகங்களில் பார்வைகள் மற்றும் நன்கொடைகளை குவிப்பதற்காக ஆஸ்திரேலிய பெண் ஒருவர் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு சிறுக சிறுக விஷம் கொடுத்துள்ளார். இதில் குயின்ஸ்லாந்திலுள்ள 34 வயதான பெண் ஒருவர் எந்த மருத்துவ அனுமதியும் இல்லாமல் அங்கீகரிக்கப்படாத மருந்து சீட்டுகள் மூலம் மருந்தாகத்திலிருந்து மருந்துகளை வாங்கி தனது குழந்தைக்கு வழங்கியதாக காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் 2024 ஆகஸ்ட் 6 முதல் அக்டோபர் 15 வரை அந்த பெண் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்ததாக போலீசார் கூறுகின்றனர்.

இந்நிலையில் பிரிஸ்பேனில் உள்ள மருத்துவமனை ஒன்று குழந்தையின் நிலை குறித்து சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு புகார் கொடுத்ததால் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் மாத்திரைகள் மற்றும் சிறிக சிறிக அளித்த விஷயத்தின் மூலம் நோய்வாய்ப்பட்டு பரிதாபமான நிலையிலிருந்த குழந்தையின் வீடியோக்களை எடுத்து GofundMe கொடை வசூல் தளத்தை பயன்படுத்தி 37 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை அந்த பெண் நன்கொடையாக பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. பின்னர் அப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்து பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.