
மதுரை மாவட்டத்திலுள்ள நாவினிபட்டியில் மதிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜசுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஹரி பிரசாத் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக படிக்கட்டுக்கு கீழே இருந்த தண்ணீர் தொட்டியில் ஹரி பிரசாத் தவறி விழுந்து உயிரிழந்தான்.
இதனை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற ஹரிபிரசாத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.