கேரளா சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இங்குள்ள மலைவாசஸ் தலங்களும், நீர்நிலைகளும் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக அங்குள்ள ஏரிகளில் நடத்தப்படும் படகு சவாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

அதுவும் ஹவுஸ் போட் என்கின்ற மேற்கூரையுடன் இருக்கும் குடும்ப படகு சவாரிகளை விரும்புவார்கள். இங்குள்ள ஏரிகளில் 500-க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளனர். அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஹவுஸ் போர்டுகளில் விருந்துகள் நடத்துவதும் உண்டு.

அந்த வகையில் சமீபத்தில் ஆலப்புழை கைநகரி ஏரியில் ஆடம்பரமாக திருமண நிகழ்ச்சி நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுற்றுலாத்துறை மந்திரி அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த படம் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது டெல்லி காவல் துறையில் ஹரிதா (25) என்பது தடயவியல் நிபுணராக இருக்கிறார். இவர் ஆலப்புழை புன்னமடை காயலில் ஆண்டுதோறும் நடைபெறும் படகு போட்டியில் பெண்கள் அணி கேப்டனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், சாலக்குடி ஹரிநாத் என்பவருக்கும் நிச்சயிக்கப்பட்டது.

இதில் மணப்பெண் தனது திருமணத்தை ஏரியின் நடுவில் நடத்த விரும்பினார். இதற்காக மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்றனர். பின்னர் திருமணம் நடத்த ஏரியில் மண்டபம் போன்று ஒரு செட் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின் மணமக்கள் அழைத்துவரப்பட்டு, மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏரியின் நடுவில் நடந்த இந்த திருமணம் அனைவரையும் கவர்ந்தது.