மாநில திட்டக்குழு 6-வது கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கலந்துக்கொண்டனர்.  அப்போது முதலமைச்சர் கூறியதாவது, கல்வி, மருத்துவம், சுகாதாரம், சத்துணவு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தோடு ஆக்கபூர்வமான செயல் திட்டங்களை அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

மாநிலத்தின் வளர்ச்சி என்பது சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை மாநில சுயாட்சி அடிப்படையில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தினார்.