ஊட்டியில் கடந்த சில நாட்களாகவே உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டியில் மட்டுமின்றி குன்னூர் கோத்தகிரியிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோத்தகிரியில் உள்ள ஜக்கனாரை அடுத்துள்ள தும்பூர் குக்கிராமத்திற்கு அருகே கிணறு ஒன்று உள்ளது.

அந்த கிணறில் கரடிகள் தவறி விழுந்து உயிருக்கு போராடி உள்ளனர். இதனை பார்த்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், கிணற்றுக்குள் ஒரு ஏணியை வைத்தனர். பின்னர் கரடி அந்த ஏணியை பிடித்து மேலே ஏறி வெளியே வந்து வனப்பகுதிக்குள் சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.