உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் என்னும் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கணவனுக்கு மதுப்பழக்கம் மற்றும் சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து இவர் மனைவியின் நகை மற்றும் 7 ஏக்கர் நிலத்தை சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று தனது நண்பர்களோடு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர் தனது மனைவியை வைத்து சூதாடியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் அவரது மனைவியை நண்பர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் அனுமதித்துள்ளார்.

இதை தடுக்க முயன்ற தனது மனைவியின் கைவிரலை உடைத்து சித்திரவதை செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மனைவி தனது கணவரை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை குறித்து அவரிடம் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.