ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பிரபல மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆசையாக ஆப்பிரிக்கன் சாம்பல் நிற கிளியை வளர்த்துள்ளார். அந்தக் கிளி திடீரென காணாமல் போய் உள்ளது. இதனால் அவர் 2 நாட்கள் சாப்பிடாமல் கிளியை தேடி அலைந்து உள்ளார்.

அதோடு கிளியை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டி வலை வீசி தேடிவந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் அருகில் உள்ள கோயில் மரத்தில் அந்த கிளி இருப்பதை அறிந்த சதீஷ் அங்கு சென்று அதனை மீட்டுள்ளார். இவரை கண்டதும் ஓடி வந்த கிளி இவரிடம் பேசும் காட்சி  இணையதளத்தில் வைரலாகி வருகிறது.