
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள குன்னுவரன் கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் தான் கபிலன் (24). இவர் சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகளை காதலித்து வந்ததாக தெரிய வருகிறது. அந்தப் பெண் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் இதனை மணிகண்டன் கண்டித்துள்ளார். ஆனால் கபிலன் தன் காதலை கைவிடவில்லை.
இதை அடுத்து தன் காதலியே பார்க்க அவர்கள் வீட்டிற்கு சென்ற கபிலனுக்கும் மணிகண்டனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த அறிவாளை எடுத்து கபிலனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கபிலனை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கபிலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.