புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்களம்பூர் ஊராட்சியில் குமாரப்பட்டி கொள்ளணி கண்மாய் அமைந்துள்ளது. இங்கு நேற்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ரோகு, விரால் உள்ளிட்ட பலவகை மீன்கள் அடங்கும். இதனையடுத்து பிடித்த மீன்களை பொதுமக்கள் வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.