தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 13 வயதுடைய 8- ஆம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஸ்கேட்டிங் விளையாட்டில் சிறந்து விளங்கியதால் சேலம் மாவட்டம் கணவாய் புதூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(26) என்பவரிடம் பயிற்சிக்காக சென்றுள்ளார். இதனையடுத்து பயிற்சி முடிந்ததும் சந்தோஷ்குமார் தினமும் சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு வீட்டில் விட்டு வருவது வழக்கம்.

இதனை சாதகமாக பயன்படுத்தி ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க சிறுமியை சந்தோஷ் குமார் ரயிலில் நாக்பூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சந்தோஷ் குமார் சிறுமிக்கு தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.