
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பருவம் தவறிபெய்த மழையால் டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபற்றி தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர்சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத் துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற் பயிருக்கு இழப்பீடாக பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின் படி 33% மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் நெல்அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதம் அடைந்த இளம் பயறு வகைகளுக்கு இழப்பீடு தொகையாக ஹெக்டேருக்கு ரூ.3,000 அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல் தரிசில் உளுந்து தெளித்து கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டுமாக உளுந்து விவசாயம் செய்ய 50% மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும். கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை வாயிலாக 50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரமானது வாடகைக்கு வழங்கப்படும்.