
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,கௌதமி அவர்கள் கொடுத்த புகார் ஆமை வேகத்தில்… நத்தை வேகத்தில் தான் போயிட்டு இருக்கு.. இன்னும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே நேரத்துல அவர் புகார் கொடுக்கப்பட்ட அந்த நம்பர் பாரதி ஜனதா கட்சியினுடைய சில மந்திரிகளோடு புகைப்படம் எடுத்து இருக்காங்க.
அவங்க ஒரு அறக்கட்டளையின் சார்ந்து இருக்கிறார்கள், அப்படிங்கிறது அவங்களோட தனிப்பட்டது. அதில் எப்பொழுதும் கட்சி தலையிடாது. புகார் கொடுக்கப்பட்டு புகாரில் முகாந்திரம் இருக்குன்னா… கட்டாயம் நடவடிக்கை எடுக்கணும். இதிலே பாரதிய ஜனதா கட்சிக்கும், அந்த நபருக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. அந்த நபர் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பில் இல்ல…
பாரதிய ஜனதா கட்சியில் எதிலும் இல்லை… நான் பேசினதும் கிடையாது… பார்த்ததும் கிடையாது… அதே போல சீனியர் லீடர்ஸ்ஸும்… இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையிலும் சரி… கட்சியாகவும் சரி…. நான் கௌதமி அவர்களுடன் இருக்கிறேன்…. ஏனென்றால் இது அவர்கள் கஷ்டப்பட்டு….. அவர்களுடைய வாழ்நாளில் அவர் சம்பாதித்த பணம். அவர் சம்பாதித்த சொத்து… யார் தவறான முறையில் அதை எடுத்திருந்தாலும் கூட அது தவறுதான்.
இந்த விஷயத்தில் சிவில் கேஸ் என சொல்லலாம். ஆனால் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கணும். ஒருவேளை அப்படி யாராச்சும் பாரதி ஜனதா கட்சியில் அவுங்களுக்கு எதிராக… ஒரு குற்றவாளியை காப்பாற்றுவதற்கு முயற்சி எடுத்தால் ? நீங்கள் என்கிட்ட பெயர் சொல்லுங்க, நான் பாத்துக்குறேன். கவுதமி அவர்கள் விஷயத்தில் நான் இருக்கேன். கட்சியில் இருக்கிறாங்க… இருக்கல… அது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை.
ஒரு காலகட்டத்தில் ஒரு முடிவு எடுக்குறாங்க. கௌதமி அவர்கள் கட்சியில் இல்லை என்றாலும் கூட, அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி நிச்சயம் உதவும். ஏன்னா… நம்ம கட்சியில பயணம் பண்ணி இருக்காங்க… நியாயமான கேள்வி, நியாயமான கோரிக்கை, அதற்க்கு தொடர்ந்து நாங்கள் நின்று இருக்கின்றோம். அதற்க்கு கட்சி உதவி செஞ்சிருக்கு. வேற எந்த சட்ட உதவி வேண்டுமானாலும் கூட பாரதிய ஜனதா கட்சி உறுதியாக உதவத்தான் போகிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்தார்.