
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பொதுமக்களை அச்சுறுத்தி பயிர்களை சேதப்படுத்துகிறது. அந்த யானையை பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. நேற்று விளா முண்டி வனப்பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் 10 கிலோமீட்டர் தூரம் சென்று அந்த யானையை வனத்துறையினர் தேடி பார்த்தேன். ஆனால் யானையை கண்டுபிடிக்க இயலவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் யானையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .