
மத்திய அரசு பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொள்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. NCERD பாடம் உரையின் கீழ் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய NCERD மதிப்பு புத்தகங்களில் ஆங்கில வழி பாடப் புத்தகங்களும் ஹிந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒன்று மட்டும் இரண்டாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் மிருதம் மற்றும் சந்தூர் என்று பேரிடப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய புத்தகங்கள் முன்னதாக மொழிக்கு ஏற்ப பெயரிடப்பட்டு வந்தன. ஆனால் இந்த முறை கணித புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்கு கணித பிரகாஷ் என்று இந்தி பெயர் வழங்கப்பட்டுள்ளது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. என்.சி.இ.ஆர்.டி. துவங்கி, எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? என்று குறிப்பிட்டுள்ளார்.