சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆனந்தவல்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் வயிற்று வலியை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

அப்போது அவரது வயிற்றில் பெரிய கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதோடு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தினர். அதன்படி அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 6 கிலோ கட்டியை அரசு மருத்துவர்கள் அகற்றினர்.