
பாங்காங்கில் சர்வதேச அழகி போட்டியான ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2024’ போர்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் முன்னதாக அந்தந்த நாடுகளில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்று, மகுடம் சூட்டிய 70 அழகிகள் கலந்து கொண்டனர். இந்த சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பஞ்சாபை சேர்ந்த ரேச்சல் குப்தா(20) என்ற பெண் கலந்து கொண்டார். பாரம்பரிய உடை, நவநாகரிக உடை உள்ளிட்ட தகுதி சுற்றுக்கான போட்டிகள் நடந்தன.
அனைத்து சுற்றிலும் அதிக புள்ளிகள் பெற்று ரேச்சல் முதலிடத்தை பிடித்தார். இரண்டாவது இடத்தை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சிஜே ஒபைசா என்ற பெண் பிடித்தார். இதனால் ‘மிக்ஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2024’ வெற்றியாளராக ரேச்சல் அறிவிக்கப்பட்டார். இவருக்கு முன்னாள் அழகி மகுடம் சூட்டினார். 12 ஆண்டுகளாக நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா அழகி வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.