கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இளம் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. சம்பவம் நடைபெற்ற அன்று கணவர் வேலைக்கு சென்ற பிறகு இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனையடுத்து சமையல் வேலைகளை முடித்துவிட்டு மதியம் இளம்பெண் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் இளம் பெண்ணை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதில் கோபமடைந்த வாலிபர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தர்மபுரியை சேர்ந்த ஆனந்த்(21) என்பவரை கைது செய்தனர். இவர் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.