கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி மங்கம்மாள் சாலையில் ஜெபன் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாய் விஜயா ரோஸ் சாலையோரம் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு தாமதமாக வந்த ஜெபன் விக்னேஷை அவரது தாய் கண்டித்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெபன் விக்னேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெபன் விக்னேஷின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.