
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நவல்பூர் கிரேட் நகர் பகுதியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான ராஜஸ்ரீ(23) என்ற மகள் இருந்துள்ளார். இவர் வீட்டில் இருந்தபடியே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக சரியாக சாப்பிடாமல் மன உளைச்சலில் இருந்த ராஜஸ்ரீ தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.